செவ்வாய், 20 ஜூலை, 2010

கனவுகளில்

''வெட்கங்கெட்ட கனவுகளில்
வீழ்ந்து தினம் எழுகிறோம் ,

புழுவாய் மாறுவதாய்
புதுக்கனவு... !

வானத்தில் பறப்பதாய்
வரும்கனவு...!

கண்கள் வழி கண்ட
காட்சிகளெல்லாம்....
கருத்துப்பிழைகளாய்
கனவுகளில்...!

கனவுகளிலும்
கற்பில்லை...!
நிஜங்களிலும்
நேர்மையில்லை...!

என்றோ புதைத்த
எச்சில் நினைவுகளால்
நிகழும்.....

''வெட்கங்கெட்ட கனவுகளில்
வீழ்ந்து தினம் எழுகிறோம் ,

1 கருத்து: