திங்கள், 26 ஜூலை, 2010

நிதர்சனம் .....


யாராவது
யாரோடவாவது
பேசத்தான்
விரும்புகிறார்கள்...!

மௌனமாய்
மனதிற்குள்
யாரும்
இருப்பதில்லை...!

அடுத்து
வந்தால்
ஆஸ்தி
கேட்ப்பார்களோ...

என்றொரு
அவஸ்தையோடு...,
சாலைகளில்
சந்திக்கையில்
மௌனமாய்...

ஒரு
புன்னகையோடு
புதைக்கிறார்கள்
மனிதநேயத்தை...!

இருந்தாலும்
யாராவது
யாரோடவாவது
பேசத்தான்
விரும்புகிறார்கள்...!

1 கருத்து: